Tuesday 31 May, 2011

உன்னால் நான்



உன்னை பற்றிய
வார்த்தைகளால் - நான்
கவிஞன் ஆகிறேன். . .
உன்னை பற்றிய
நினைவுகளால் தானே - நான்
காதலன் ஆகிறேன். . .

Monday 30 May, 2011

கவிதயை பற்றிய கவிதை



இப்பொழுதுதான் உனக்காக
கவிதை எழுதவேண்டும்
என்று தோன்றியது எனக்கு
இவ்வளவு நாளாக
கவிதையை ரசித்துக்கொண்டிருந்தேன்
இப்பொழுதுதான் எழுத
ஆரம்பித்திருக்கின்றேன். . .

Saturday 28 May, 2011

தற்சமய முற்றுப்புள்ளி




போதும் நிறைய பேசியாச்சு
என்று நீ சொல்லும் போதெல்லாம்
எனக்கான வார்த்தை இன்னும்
உன்னில் ஒழிந்துகொண்டிருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு புரியும். . .1/9/2009

Thursday 26 May, 2011

கண்ணீர் காயம்

நான் உன்னிடம்
சண்டையிடும் போதெல்லாம்
உன் அழுகையை
பரிசாகத் தருவாய். . .
நீசிந்தும் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் என்
இதயத்தை எவ்வளவு
ஆழமாய் துளைத்து
காயப்படுத்தும் என்பது
உனக்கு தெரியவாபோகின்றது. . .

Tuesday 24 May, 2011

தொலைவில் நீ

உரத்த குரலில்
கத்திச்சொன்னேன்
என் காதலை. . .
இதய நரம்புகள் பீரிட
இரத்த அணுக்கள்
அத்தனையிலும் நீ. . .


என் மனதில் எவருமில்லை
உன்னைத்தவிர. . .
மௌனமாய் தினம்
நான் இருந்தாலும். . .
என் மனதில் நித்தம்
இந்த போராட்டம். . .


கலாச்சார கசிவுகளுக்குள்
சிக்கிக்கொண்டது
நம் காதல். . .


கண்களால் வார்த்தை சொல்லி
என் காதலுக்கு
வசனம் எழுதியவள். . .


இன்று கண்ணுக்கெட்டாத தூரத்தில்
கலங்கரை விழக்கில்
கார்த்திகை தீபமாய் இருக்கின்றாள். . .

Sunday 22 May, 2011

இழப்பு



கண்ணீர்த்துளிகள் வேண்டாமென்று
காதல் வாங்கினேன். . .
இறுதியில் இழந்துவிட்டேன்
என் கண்களையே. . .

Saturday 21 May, 2011

காதல் கல்வெட்டு



எளிமையாய் அழித்துவிட
உன் நினைவுகளை
எழுத்துக்களாய் எழுதவில்லையடி
என்னுள், என்றுமே
நிலையாய் இருக்க
கல்லாக்கிவிட்டேன்
என் இதயத்தை
உன் நினைவுகளால். . .

Friday 20 May, 2011

பார்க்கமாட்டேன் உன்னை

உன்னை பார்த்தால்
மனது வலிக்கின்றது
மனது வலித்தால்
நினைவுகள் துளிர்கின்றன
நினைவுகள் துளிர்விட்டால்
காதல் பிறக்கின்றது
காதல் பிறந்தால்
மனது வலிக்கின்றது
என் மனது வலித்தால்
உனக்கும் வலிக்கும்
இனிமேல் உன்னை
பார்க்கமாட்டேன். . .

Tuesday 17 May, 2011

மென்மை



உன் பாதங்களுக்கு
அடியில் பூக்களாய்
மலர ஆசை . . .
மலரிலும் நீ
எவ்வளவு மென்மையானவள்
என்பதை அறிந்துகொள்ள. . . 

Monday 16 May, 2011

கைம்பெண்



பயன்பாட்டிற்கு பிறகு
தூக்கியெரியப்பட்ட
பயனற்ற பொருளாகிவிட்டேன். . .
நீ என் காதலை
தூக்கி எரிந்த பின்பு
நானும் பயனற்றுப்போனேன். . .

Friday 13 May, 2011

முக்தி



பட்டுப்பூச்சிகள் கூட்டை
உடைத்து பறப்பதைவிட. . .
உன் பட்டுச்சேலைக்கு
நூல் கொடுக்கவே
காத்துக்கொண்டிருக்கின்றன
தன் மரணத்திற்காக. . .

Monday 9 May, 2011

செல்லமே


என்றுமே எனக்கு
நீ குழந்தை. . .
நான் சாகும் வரை
உன்னைச் சுமந்துகொண்டிருப்பேன்
என் மனதில். . .

Friday 6 May, 2011

ஏக்கம்





இரவுகளில் உன்னை
காணமுடியாமல்
இறுதியில் கருகிவிட்டது
நிலா. . .
அன்றுதான் அம்மாவாசை. . .

Thursday 5 May, 2011

முழுமை



இரவில் ஒருநாள்
உன்னை
வீதியில் கண்டது
நிலா. . .
அன்றுதான் 
அதற்கு
பௌர்ணமி. . .

Tuesday 3 May, 2011

பிறை



தினமும் தேய்கின்றது
நிலா. . .
இரவில் உன்னைப்
பார்க்கமுடியாமல். . .

Monday 2 May, 2011

தவம்



தினமும் பன்னிரண்டு
மணிநேரம் தவமிருக்கின்றது
சூரியன். . .
அதிகாலையில் உன்
கண்விழிப்பிற்காக. . .

Sunday 1 May, 2011

பிரிவில் சுகம்


உன்னைப் பிரிந்த
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகளாலும் தான்
வலுப்பெருகின்றன . . .