என் இதயம் சுமந்தவளே
எனக்காய் அழுதவளே
இன்னல் பல இருந்தும்
என் எண்ணம் புரிஞ்சவளே. . .
மனசு கனக்குதடி
மதிகலங்கி சுத்துதடி
உசிரு துடிக்குதடி - தினம்
உன்னினைவாலே சாகுதடி. . .
மாய வலை விரிச்சு
மரகதமே உன்ன கொண்டுசெல்ல
ஒத்தக்கல்லு கோபுரமாய் நானும்
ஒடஞ்சு போய் நின்னேன்டி. . .
மனுசனா என்ன மாத்தியவளே
மனசுன்னா என்னானு காட்டியவளே
காலம் மாத்திப் போனாலும் - என்
காதல் மாறிப் போகாதடி. . .