Sunday 30 October, 2011

அவளே உலகம்


காதலில் விழுந்த பின் இதயம் தான்
தொலைந்து போகும் என்பார்கள். . .
என்னவள் உடனிருக்கையில்
என்னைச் சுற்றிய உலகமே
தொலைந்து போய்விடுகின்றது
எனக்கு. . .

Tuesday 25 October, 2011

காதல் காலம்



அன்று காதலை எனக்குள்
கட்டவிழ்த்து விட்டவள் நீ. . .
இன்று அதை கட்டுப்படுத்த முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றேன் நான். . .

Thursday 20 October, 2011

காதலே வரம்


உன்னை காதலிப்பதையே வரம்
என நினைக்கின்றேன் நான். . .
கடவுளைத் தொழும் பக்தன் போல
காதலைத் தொழும் பித்தன் நான். . .

Sunday 16 October, 2011

முடிவில்




கண்களை மூடி யோசித்துப் பார்
உன் நினைவுகளுக்குள்
நான் இல்லை என்றால். . .
என் மூச்சுக்காற்று கூட
உன் நுரையீரல் தீண்டாது. . .

Wednesday 12 October, 2011

பிரம்மிப்பானவள் நீ

பிரம்மிப்பானவைகளைப் பார்த்தால்
ஒரு நிமிடம் மூச்சு நிற்குமாம்
உன்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
நான் மூச்சுவிடவே மறந்துவிடுவேனோ
என்ற பயம் எனக்கு. . .

Saturday 8 October, 2011

என்றும் என் நினைவில்

என் இதயம் சுமந்தவளே
எனக்காய் அழுதவளே
இன்னல் பல இருந்தும்
என் எண்ணம் புரிஞ்சவளே. . .

மனசு கனக்குதடி
மதிகலங்கி சுத்துதடி
உசிரு துடிக்குதடி - தினம்
உன்னினைவாலே சாகுதடி. . .

மாய வலை விரிச்சு
மரகதமே உன்ன கொண்டுசெல்ல
ஒத்தக்கல்லு கோபுரமாய் நானும்
ஒடஞ்சு போய் நின்னேன்டி. . .

மனுசனா என்ன மாத்தியவளே
மனசுன்னா என்னானு காட்டியவளே
காலம் மாத்திப் போனாலும் - என்
காதல் மாறிப் போகாதடி. . .

Tuesday 4 October, 2011

காதல் ஒளி

வெளிச்சம் தெரியா சாலையில்
நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு
என் தோல் மீது தலை
சாய்ந்து நடக்கையில்
எனக்குள் இருந்த பயம்
தொலைந்து போனதோ இல்லையோ. . .
அங்கே காதல் ஒளிர்ந்துவிட்டது. . .