Thursday 30 June, 2011
Tuesday 28 June, 2011
காதலன் ஆகிறேன்
நான் காதலிக்க
ஆரம்பித்துவிட்டேன். . .
கவிதை எழுதுவதால் அல்ல. . .
உன் கண்கள்
சொல்லும் வார்த்தைகளை
படிக்க கற்றுக்கொண்டதால். . .
Sunday 26 June, 2011
அலையின் ஏக்கம்
உன் பாதங்களை
தொட்டுச் செல்லும்
கடல் அலைகள்
கண்ணீர்விடுகின்றன. . .
இந்த மண்னைப் போல
உன் பாதங்களை
எப்பொழுதும் தழுவ
முடியவில்லையே என்று. . .
Friday 24 June, 2011
எனக்கே
சிரித்தும் கேட்டுவிடாதே
அழுதும் கேட்டுவிடாதே
அவள் அழகை. . .
நிலவே
அவளின் அனைத்தும்
எனக்கு மட்டுமே
சொந்தம். . .
Wednesday 22 June, 2011
மறவாதே கண்மணியே
நீ வாசல் காதவுகளை
மூடியதற்கே வழிமாறி
நடக்கின்றேன் நான். . .
தயவுசெய்து உன்
இதயக் கதவுகளையும்
இதைப்போல் மூடிவிடாதே
கல்லறையில் போய்
ஒழிந்துகொள்வேன் நான். . .
Monday 20 June, 2011
காதல் வீதி
எனக்குப் பிடித்தவற்றை
எல்லாம் கடையில்
வாங்கிவிடுகின்றேன். . .
காதலும் விற்பனை
பொருளாக இருந்திருந்தால்
நான் தற்கொலைக்கு
முயற்சி செய்திருக்கமாட்டேன். . .
Saturday 18 June, 2011
Thursday 16 June, 2011
கண்ணுறங்கும் வெண்நிலவு
நீ கண்விழித்திருக்கும் போது
உன்னை ரசித்ததைவிட. . .
நீ உரங்கும் வேலையிலேயே
அதிகம் உன்னை ரசிக்கிறேன். . .
பஞ்சு மெத்தையில் கண்ணுறங்கும்
வெண்நிலவாய் நீ. . .
உன்னை ரசித்ததைவிட. . .
நீ உரங்கும் வேலையிலேயே
அதிகம் உன்னை ரசிக்கிறேன். . .
பஞ்சு மெத்தையில் கண்ணுறங்கும்
வெண்நிலவாய் நீ. . .
Tuesday 14 June, 2011
Sunday 12 June, 2011
கலவரப் பகுதி
அவள் கண்களின் தாக்குதலால்
என் இதயத்தில் அடிக்கடி
சேதம் ஏற்ப்பட்டுவிடுகின்றது. . .
என் இதயத்தையும் அறிவியுங்கள்
கலவரப் பகுதியாக. . .
Friday 10 June, 2011
Wednesday 8 June, 2011
உன்னைத் தேடி
கடவுளுக்கு பதிலாக
உன்னைத் தேர்ந்தெடுத்தேன்
என் மனச்சோகங்களை
உன்னிடம் பகிர்ந்துகொள்ள. . .
நீயும் இப்பொழுது
பேசமறுக்கிறாய் என்னிடம். . .
இருந்தபோதும் சொல்லி
அழுகிறேன் சோகங்களை. . .
கடவுளும் பேசுவதில்லை
நீயும் பேசுவதில்லை. . .
கதறி அழுகிறேன்
நான் மட்டும். . .
கைஉதறிவிட்டு போன
உன்னைத் தேடி. . .
Tuesday 7 June, 2011
காத்திருக்கிறேன்
உனக்காக காத்திருப்பது
என் கால்கள் மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்
வந்துவிடு வேகமாக
காத்திருக்கிறேன் உன்
நினைவுகளால். . .
Monday 6 June, 2011
கவிதையே
சிந்தித்தால் தான் கவிதைவரும்
என்கின்றார்கள் . . .
உன்னைப் பற்றி பேசினாலே
கவிதையாகத்தானே
இருக்கின்றது. . .15/2/2011
Sunday 5 June, 2011
Saturday 4 June, 2011
Friday 3 June, 2011
காதல் வெளி
காதல் பிறந்த காலத்தில்
என் இதயம் தொட்டு
பறந்த பட்டாம் பூச்சிகளை
மட்டும் சிறைபிடிக்கவே
விரும்பவில்லை என் மனது. . .
இன்று அவைகள்
என் நினைவெல்லைகளின்
பயண தூரங்களை கடந்து
காதல் வெளியில்
சிறகடித்துச் செல்கின்றன. . .
என் இதயம் தொட்டு
பறந்த பட்டாம் பூச்சிகளை
மட்டும் சிறைபிடிக்கவே
விரும்பவில்லை என் மனது. . .
இன்று அவைகள்
என் நினைவெல்லைகளின்
பயண தூரங்களை கடந்து
காதல் வெளியில்
சிறகடித்துச் செல்கின்றன. . .
Thursday 2 June, 2011
புனிதன்
அவள் உன்னை தூக்கியெறிந்த பிறகும்
எதற்காக இன்னும் அவளுக்காகவே
துடிக்கின்றாய் - நீ மனிதன் தானா? - என்று
எதிர்மறை எண்ணங்கள்
என்னை கேள்விகேட்கின்றன. . .
பாவம் அவைகளுக்கு
எப்படித் தெரியும் நான்
உன்னை காதலிக்க தொடங்கிய
நாள் முதலே புனிதன்
ஆகிவிட்டேன் என்று. . .
எதற்காக இன்னும் அவளுக்காகவே
துடிக்கின்றாய் - நீ மனிதன் தானா? - என்று
எதிர்மறை எண்ணங்கள்
என்னை கேள்விகேட்கின்றன. . .
பாவம் அவைகளுக்கு
எப்படித் தெரியும் நான்
உன்னை காதலிக்க தொடங்கிய
நாள் முதலே புனிதன்
ஆகிவிட்டேன் என்று. . .
Wednesday 1 June, 2011
நீ தந்த கவிதை
உன்னை காதலிக்க
தொடங்கிய நாள்முதல்
கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன் என்றேன். . .
காரணம் கேட்கின்றாய். . .
நான் எழுதிய
ஒவ்வொரு வரிகளும் - நீ
பேசிய வார்த்தைகள்தானே. . .
Subscribe to:
Posts (Atom)