என்னைச் சுற்றி
ஒளி வட்டம் இருக்கின்றதா?
என்பது எனக்குத் தெரியாது. . .
என்னைச் சுற்றி
உன் நினைவுவட்டம் இருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு
நன்றாகத் தெரியும். . .
விண்மீங்கள் வீழ்வதைப் பார்த்தால்
மறதி ஏற்படுமாம். . .
உன்னை மட்டுமே
நினைவில் வைத்திருக்கும்
என் கண்முன்னே
ஒரு விண்மீன்
விழுந்தால் என்ன?
ஓராயிரம் விண்மீன்
விழுந்தால் என்ன?
24 மணி நேரமும்
உன்னைப் பற்றிய சிந்தனைதான்
நிகழ்காலத்தின் அத்துனை
நிமிடங்களிலும் நீயிருக்கும் போது
எதிர்காலத்தில் மட்டும்
எப்படி வேறு ஒருவர்
வந்துவிட முடியும். . .
காலங்கள் கடந்துவிட்ட
காதல், நம் காதல்
என்ற வாக்கியத்தை
வார்த்தைகள் மாற்றி
போற்றுவிட்டாயடி. . .
மறந்துவிடு என்றபின்
செத்துவிட்ட என்
நினைவுகளிலும்
துடித்துக் கொண்டிருக்கின்றதடி
நம் காதல். . .