இப்பொழுதுதான் உனக்காக
கவிதை எழுதவேண்டும்
என்று தோன்றியது எனக்கு
இவ்வளவு நாளாக
கவிதையை ரசித்துக்கொண்டிருந்தேன்
இப்பொழுதுதான் எழுத
ஆரம்பித்திருக்கின்றேன். . .
போதும் நிறைய பேசியாச்சு
என்று நீ சொல்லும் போதெல்லாம்
எனக்கான வார்த்தை இன்னும்
உன்னில் ஒழிந்துகொண்டிருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு புரியும். . .1/9/2009
உன்னைப் பிரிந்த
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகளாலும் தான்
வலுப்பெருகின்றன . . .