Monday 11 July, 2011

என்றும். . .


உன்னைப் பற்றி
சிந்திக்காமல் என்னால்
இருக்க முடியாது. . .
என் இதயத்துடிப்பு
நின்று விட்ட
நாட்களில் கூட. . .
என் மரண ஓலம்
உனைப் பற்றிய
பாடல் பாடும். . .

10 comments:

கவி அழகன் said...

அழகிய கவிதை ரசித்தேன்

பிரணவன் said...

நன்றி சகா. . .

நிரூபன் said...

எப்போதும் அவளை நினைத்துக் கொண்டிருக்கும் இதயத்து உணர்வலைகளை வார்த்தைகளாக்கியிருக்கிறீங்க. அருமையான கவிதை பாஸ்.

Yaathoramani.blogspot.com said...

வாழ்வின் இறுதிப் பாடல் கூட
அவள் குறித்த மரண ஓலப் பாடலே...
வித்தியாசமான ஆழமான காதலை வெளிப்படுத்தும்
அற்புதக் கவிதைநல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

vidivelli said...

சுப்பர் கவிதை...
அசத்துங்க...
வாழ்த்துக்கள்...

பிரணவன் said...

நினைவுகளே கவிதை. . .நன்றி நிரூ. . .

பிரணவன் said...

அவளை பற்றிய உணர்வுகள் அனைத்தும் காதலும் கவிதையாகவும் தான் இருக்கின்றன. . .நன்றி sir. . .

பிரணவன் said...

நன்றி அக்கா. . .

Vetha.(kovaikkavi) said...

பிரணவன் ஏன் 4- 6. வரிகள் எழுதுகிறீர்? இன்னும் எழுதலாமே ! இது ஏதோ ஒப்புக்கு எழுதுவது போல அல்லவா உள்ளது. திறமையைக் காட்ட வேண்டாமோ! வாழ்த்துகள்..இன்னும் முன்னேற...
Mrs.Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

பிரணவன் said...

இவைகள் அவளைப் பற்றிய சின்ன சின்ன மன இறுக்கங்கள். மனதின் பெருவலி இன்னும் மிச்சம் இருக்கின்றது காத்திருங்கள். . .