Friday 29 July, 2011

காதல் ஞானி

என்னைச் சுற்றி
ஒளி வட்டம் இருக்கின்றதா?
என்பது எனக்குத் தெரியாது. . .
என்னைச் சுற்றி
உன் நினைவுவட்டம் இருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு
நன்றாகத் தெரியும். . .

5 comments:

Yaathoramani.blogspot.com said...

ஞானக் கருத்துக்களை
உதிர்தலை வைத்துக்க்கூட
ஒளிவட்டத்தை அறிந்து கொள்ளக் கூடும் போல
கவிதை மழை பொழிதலைக் கொண்டே
அவள் நினைவு வட்டம் சூழ்ந்திருப்பதை
தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதே
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் சகோ,
அவளின் நினைவுகள், மனதிற்குப் பிடித்தமானவளின் நினைவுகள் எப்போதுமே உங்களைச் சுற்றி இருக்கும் எனும் காதல் மையக் கருத்தினைத் தாங்கி வந்திருக்கும் கவிதை.....காதல் ரசத்தால் சுருக்கமான வரிகளூடாக நினைவான பொருளைத் தந்து மனதை மகிழ்வித்திருக்கிறது.

நிரூபன் said...

இண்ட்லி, தமிழ்10 இல் Submit என்று உங்கள் பதிவில் இருக்கும் பட்டனைக் கிளிக் செய்து, ரிஜிஸ்டர் பண்ணி இணைக்க வேண்டும் சகோ.

பிரணவன் said...

நிச்சயம் அப்படித்தான். அவள் நினைவுகளால் சூழப்பட்ட பின். . .நன்றி sir. . .

பிரணவன் said...

வணக்கம் சகா. . .முன் தேதியிட்ட பதிவு என்பதால், சமர்ப்பிப்பதில் சற்று தாமதம் ஆகிவிட்டது இப்பொழுது இணைத்துவிட்டேன். நன்றி நிரூ. . .