Tuesday 24 May, 2011

தொலைவில் நீ

உரத்த குரலில்
கத்திச்சொன்னேன்
என் காதலை. . .
இதய நரம்புகள் பீரிட
இரத்த அணுக்கள்
அத்தனையிலும் நீ. . .


என் மனதில் எவருமில்லை
உன்னைத்தவிர. . .
மௌனமாய் தினம்
நான் இருந்தாலும். . .
என் மனதில் நித்தம்
இந்த போராட்டம். . .


கலாச்சார கசிவுகளுக்குள்
சிக்கிக்கொண்டது
நம் காதல். . .


கண்களால் வார்த்தை சொல்லி
என் காதலுக்கு
வசனம் எழுதியவள். . .


இன்று கண்ணுக்கெட்டாத தூரத்தில்
கலங்கரை விழக்கில்
கார்த்திகை தீபமாய் இருக்கின்றாள். . .

No comments: